அதிநவீன கேமராக்களுடன் பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் திறப்பு
31 அதி நவீன டிஜிட்டல் கேமரா பொருத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட காஞ்சிபுரம் பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் திறப்பு
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் எம்.சுதாகர் ரிப்பன் வெட்டியும் , குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர். இந்த புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 31 அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராவையும் பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் நகர் முழுவதும் குறிப்பாக மக்கள் அதிகம் நடமாட்டம் பகுதியுமான பேருந்து நிலையம், இரட்டை மண்டபம், காமராஜ் சாலை, மூங்கில் மண்டபம், பூக்கடை சத்திரம், என சிவ காஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 31 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததை பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக குற்ற தடுப்பு விழிப்புணர்வுக்கான ஆடியோ பதிவும் வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கபட உள்ளதால் குற்ற சம்பவங்கள் குறைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர், ஆய்வாளர்கள் விநாயகம், ராஜகோபால், பெருநகராட்சி ஆணையர் நாராயணன் காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டனர்.