/* */

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வ பெருந்தகை சவால்

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சவால் விடுத்து உள்ளார்.

HIGHLIGHTS

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வ பெருந்தகை சவால்
X

நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்  பெருந்தகை எம்எல்ஏ

மாநில அரசு திட்டங்கள் , மத்திய அரசு திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மோடியை அழைத்து வருவாரா அண்ணாமலை நாங்கள் தயார் என சவால் விட்டுள்ளார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில் அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட அனைத்து இந்திய கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி ஆர் பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வம் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரிடம் வாக்குகள் கோரினார்.

இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதும் , அளிக்காத வாக்குறுதியான காலை உணவு திட்டம் நான் முதல்வன், இன்னுயிர் காக்கும் 24 மணி நேரம் என பல எண்ணற்ற திட்டங்களை வாக்குறுதிகள் அளிக்காமல் தமிழக மக்களுக்கு செயல்படுத்திய அரசு இந்த கூட்டணி அரசு.

இரண்டரை ஆண்டுகளில் மாநில அரசு செயல்படுத்திய திட்டங்கள் , பத்து ஆண்டுகளாக மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் அண்ணாமலையுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளதாகவும், வேண்டுமென்றால் மோடியை கூட அண்ணாமலை அழைத்து வரட்டும் விவாதிக்க நாங்கள் தயார் என சவால் விடுவதாக செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.

மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, எடப்பாடி பழனிச்சாமி எனவும் , இரண்டரை ஆண்டுகளில் 90% வாக்குகளை நிறைவேற்றியும் அளிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய அரசு இந்த அரசு எனவே இதைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் ஆர் ராஜா, கருணாநிதி, வரலட்சுமி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 March 2024 4:51 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!