Begin typing your search above and press return to search.
சொத்துவரி உயர்வு: காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தேமுதிக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சமையல் எரிவாயு, சொத்துவரி உயர்வை கண்டித்தும் இதற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து, காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக மாநில இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர். இதில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.