/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நடமாடும் தடுப்பூசி வாகனம்

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதின் மூலம் கொரோனா தடுப்பு ஊசி வாகனம் பயன்பாட்டிற்கு வந்தது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நடமாடும் தடுப்பூசி வாகனம்
X

நடமாடும் தடுப்பூசி வாகனத்தின் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இளைஞர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில், மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிமுகப்படுத்தி வைத்தார்.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இவ்வாரம் அறிமுகபடுத்தியலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பணிபுரியும் கடை உரிமையாளர் மற்றும் தொழிலாளருக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் சந்தை அருகே நடைபெற்றது. இதன் மூலம் இவ்வாகனம் செயல்பாட்டிற்கு வந்தது.

இதில் காய்கறி சந்தையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை காண்பித்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

இன்று 100 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது மேலும் உள்ள நபர்களின் எண்ணிக்கை கொண்டு மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

Updated On: 11 July 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க