Begin typing your search above and press return to search.
ராவுத்தநல்லூர் வயல்வெளியில் சாராயம் காய்ச்சி விற்ற மூவர் கைது
பெருநகர் அடுத்த ராவுத்தநல்லூர் வயல்வெளியில் சாராயம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராவுத்த நல்லூர் கிராமத்தில் மாரி என்பவருடைய கழனியில் எரி சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக பெருநகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் சோதனை செய்ததில் 20 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்து, இது தொடர்பாக இராவுத்தநல்லூர் பகுதியை சேர்ந்த மாரி , சம்பத் மற்றும் மணி ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.