/* */

களியனூர் ஊராட்சி பள்ளியில் "மாணவர் மனசு" புகார் பெட்டி அறிமுகம்

மாணவர்களின் குறை மற்றும் தேவைகள் குறித்து புகார் பெட்டி பள்ளி தலைமையாசிரியர் அறை அருகே வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

களியனூர் ஊராட்சி பள்ளியில் மாணவர் மனசு புகார் பெட்டி அறிமுகம்
X

களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு புகார் பெட்டி.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகள் தோறும் மக்கள் மாணவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிய மாணவரின் மனசு எனும் தலைப்பில் புகார் பெட்டி தலைமை ஆசிரியர் அலுவலகம் அருகே வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 124 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த மாணவர் மனசு எனும் புகார் பெட்டி அமைத்து மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மோகன் காந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பதாகை ஒன்று அமைக்கப்பட்டு அதில் மாணவிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்த பட விளக்கங்களுடன் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் மனசு புகார் பெட்டி மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றோருக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது.

Updated On: 5 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!