டிரைவர் தாக்கப்பட்டதால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்
Protest News - காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரை ஆட்டோ டிரைவர்கள் தாக்கியதால் பேருந்தை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
Protest News -காஞ்சிபுரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் 3 செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு அதிகாலை முதலில் இயக்கப்படுகிறது.
அவ்வகையில் ஓரிக்கை பணிமனை - 2 ல் இருந்து தாம்பரம் செல்லும் பேருந்து ஓட்டுனர் சுரேஷ் மற்றும் நடத்துனர் உமாபதி பணிமனையில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு எடுத்து வந்து கொண்டிருந்தபோது பேருந்து நிலையத்திற்கு வெளியே தவறான எதிர் திசையில் பேருந்துக்கு முன்பாக வந்து ஆட்டோவை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் மற்றொரு பேருந்து நடத்துனர் தனஞ்செயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஓட்டுநர் சுரேஷ் என்பவரை ஆட்டோ ஓட்டுனர் புல்லட் தீபக் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பலமாக தாக்கியதில் ஓட்டுநரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்களிடம் காவல்துறை சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அரசு ஊழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் எஸ்.பி சுதாகரிடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை வெளியே எடுக்க ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் நெடுஞ்சலாக இருப்பதாகவும் போலீஸ் பவரை காட்டி அவர்களை முறைப்படுத்த வேண்டும் எனவும் இரவு நேரங்களில் சுற்றி தெரியும் ஆட்டோக்களை திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2