ஓய்வூதியம் புதுப்பிக்க 1836 பேருக்கு மாவட்ட கருவூல அலுவலர் அழைப்பு
Pension News Today -காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9135 பேர் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் , 92% பேர் புதுப்பித்து விட்டதாகவும் மாவட்ட கருவூல அலுவலர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
Pension News Today - காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் , காவல்துறையினர் என மொத்தம் 9135 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கருவூலம் மூலம் 652 பேரும் , காஞ்சிபுரம் சார் நிலை கருவூலம் மூலம் 175 பேரும் , ஸ்ரீபெரும்புதூர் சார்நிலை கருவூலம் மூலம் 1272 பேரும் , உத்திரமேரூர் சார்நிலை கருவூலம் சார்பில் 905 பேரும் , வாலாஜாபாத் சார்நிலைக் கருவூலம் சார்பில் 731 பேர் என மொத்தம் 9135 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
இவர்கள் வருடம் தோறும் தங்களது கணக்கை மாவட்ட கருவூலம் அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டும். தற்போது அஞ்சலகம் மூலமாகவும் தங்கள் ஓய்வூதியத்தை புதுபிக்க மேற்கொள்ளலாம் என கருவூல அலுவலர் அறிவித்திருந்தார்.
இதுவரை நேரடியாக 282 பேரும், போஸ்டல் மூலம் பத்து நபர்களும் , இந்தியா போஸ்ட் பேமென்ட் மூலம் 867 நபர்களும் , அரசு சேவை மையத்தின் மூலம் ஒரு நபரும் , ஜீவன் பிரணாம் திட்டத்தின் கீழ் 6139 பேரும் என மொத்தம் 7299 பேர் இதுவரை தங்கள் ஓய்வூதியத்தை புதுப்பித்துள்ளனர்.
மீதமுள்ள 1836 நபர்கள் குறைந்த கால அவகாசமே உள்ளதால் உடனடியாக தங்களது ஓய்வூதியத்தினை விரைவாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கருவூல அலுவலர் அருண்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2