/* */

ஓய்வூதியம் புதுப்பிக்க 1836 பேருக்கு மாவட்ட கருவூல அலுவலர் அழைப்பு

Pension News Today -காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9135 பேர் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் , 92% பேர் புதுப்பித்து விட்டதாகவும் மாவட்ட கருவூல அலுவலர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஓய்வூதியம் புதுப்பிக்க 1836 பேருக்கு மாவட்ட கருவூல அலுவலர் அழைப்பு
X

காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அலுவலகம்.

Pension News Today - காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் , காவல்துறையினர் என மொத்தம் 9135 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட கருவூலம் மூலம் 652 பேரும் , காஞ்சிபுரம் சார் நிலை கருவூலம் மூலம் 175 பேரும் , ஸ்ரீபெரும்புதூர் சார்நிலை கருவூலம் மூலம் 1272 பேரும் , உத்திரமேரூர் சார்நிலை கருவூலம் சார்பில் 905 பேரும் , வாலாஜாபாத் சார்நிலைக் கருவூலம் சார்பில் 731 பேர் என மொத்தம் 9135 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இவர்கள் வருடம் தோறும் தங்களது கணக்கை மாவட்ட கருவூலம் அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டும். தற்போது அஞ்சலகம் மூலமாகவும் தங்கள் ஓய்வூதியத்தை புதுபிக்க மேற்கொள்ளலாம் என கருவூல அலுவலர் அறிவித்திருந்தார்.

இதுவரை நேரடியாக 282 பேரும், போஸ்டல் மூலம் பத்து நபர்களும் , இந்தியா போஸ்ட் பேமென்ட் மூலம் 867 நபர்களும் , அரசு சேவை மையத்தின் மூலம் ஒரு நபரும் , ஜீவன் பிரணாம் திட்டத்தின் கீழ் 6139 பேரும் என மொத்தம் 7299 பேர் இதுவரை தங்கள் ஓய்வூதியத்தை புதுப்பித்துள்ளனர்.

மீதமுள்ள 1836 நபர்கள் குறைந்த கால அவகாசமே உள்ளதால் உடனடியாக தங்களது ஓய்வூதியத்தினை விரைவாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கருவூல அலுவலர் அருண்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 19 Sep 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க