Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் 5000 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனை முகாமில் ஓரே நாளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முடக்கவும் , கிரிமிநாசினி பயன்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவுதலை தடுக்கும் விதமாக பரிசோதனை முகாம்களை நடத்தி மாதிரிகளை எடுத்து ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்து குணமடைய வைக்கும் வகையில் இதை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்திரவிட்டார்.
அவ்வகையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு சிறப்பு முகாம்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதனை பல்வேறு மருத்துவ ஆய்வகங்ளுக்கு அனுப்பி வைத்து விரைவாக முடிவுகளை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.