தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன்பெற கலெக்டர் அழைப்பு
தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி பகுதியில்272 குடியிருப்புகள், தருமபுரி வட்டம், கொன்டஹரள்ளி திட்டப்பகுதியில்280 குடியிருப்புகள், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் 608 குடியிருப்புகள், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையனூர் திட்டப்பகுதியில் 192 குடியிருப்புகள், நம்பிப்பட்டி திட்டப்பகுதியில் 420 குடியிருப்புகள் மற்றும் அரூர் பேரூராட்சி பகுதியில் அம்பேத்கார் காலனி திட்டப்பகுதியில்912 குடியிருப்புகள் மற்றும் பீச்சான்கொட்டாய் திட்டப்பகுதியில்504 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தோ்வுசெய்யப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட திட்டப்பகுதிகளுக்கு அருகில் வசித்து வரும் பொதுமக்கள், குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தலைவரின் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
பயனாளிகள் ஆண்டு வருமானம் 3 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டங்களுக்கான வாரியத்தால் நிர்ணயிக்கப்படும் பயனாளி பங்கீட்டு தொகை ரூ 1.30 இலட்சம் முதல் ரூ 1.52 இலட்சம் வரை வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும்.
குடும்பத்தினருக்கு, சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும் அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 17.12.2021 வெள்ளிக்கிழமை அன்றும்,தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 18.12.2021 சனிக்கிழமை அன்றும்,பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 21.12.2021 செவ்வாய்க்கிழமை அன்றும்,அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.12.2021 புதன்கிழமை அன்றும் மேற்குறிப்பிட்ட நாட்களில் நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 வரை சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.