திருவண்ணாமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம்: தர்மபுரி கலெக்டர் அறிவுறுத்தல்
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
HIGHLIGHTS
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நாளை (புதன்கிழமை) பிற்பகல் 1மணி முதல் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை அருணாசலேசுவரர் கோயில் வளாகத்திற்குள் பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் மேற்காணும் நாட்களில் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.