கடலூர் கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
கடலூர் கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பான மனுவை கொடுத்தனர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்ட தனியார் அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்கத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார் ஓட்டுனர்கள் உள்ளனர்,கொரானா காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி வாழ்ந்து வருகிறோம். அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து உள்ளோம்.
மேலும் அனைத்து வாகனங்களும் சரியாக இருந்தாலும் சோதனையில் ஈடுபடும் காவலர்கள் வாகனம் சென்றபிறகு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதனை ஒழுங்கு படுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தனிநபர் பயன்படுத்தும் வாகனங்களை கொண்டு வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.