Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கி ஒயர்மேன் உயிரிழப்பு!
செங்கல்பட்டு அருகே பட்டரைவாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 46). அஞ்சூர் மின்சார வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இன்று மாலை அம்மணம்பாக்கத்தை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் மின் பழுது காரணமாக அழைப்பு வந்ததை அடுத்து அப்பகுதிக்கு பாலு சென்றுள்ளார்.
அங்கு டிரான்ஸ்பார்மரில் பழுது பார்க்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாலுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.