Begin typing your search above and press return to search.
திமுக சார்பில் ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு
செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட திமுக சார்பில், இன்று ஆர். எஸ். மாத்தூர் பேருந்து நிலையம் அருகில், ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் ராஜா மற்றும் அசாவீரன் குடிக்காடு கிளைக்கழக செயலாளர் ராமாசாமி சார்பில் ஒன்றியக் கழக செயலாளர் மு. ஞானமூர்த்தி ஆகியோர் சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு மோர், லெமன்சூஸ், கரும்புச்சாரு மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.
மாவட்ட திமுக இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி. ஆர். பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ. தமிழ்மாறன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் துரை. தேன்துளி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சித்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கடலரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.