காங்கிரஸ் கட்சியின் 137- வது ஆண்டு துவக்கவிழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு துவக்கவிழாவை கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
HIGHLIGHTS
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு துவக்க விழா, அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் கொண்டாடப்பட்டது. திருமானூர் பேருந்து நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின், திருமானூர் கிழக்கு வட்டாரம் சார்பில், வட்டார தலைவர் சீமான் தலைமையில், துணைத் தலைவர் கங்காதுரை, நகரத் தலைவர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில், கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கட்சியின் கலைப்பிரிவு புகழ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின், மாவட்ட மகளிர் அணி சார்பில், கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில், மகளிர் அணி மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூண்டி சந்தானம், நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி தலைவர்கள், மேலப்பழுவூர் கோவிந்தராஜ், பார்ப்பனச்சேரி வடமலை, பூண்டி பழனிசாமி, ஐ.என்.டி.யூ.சி. தலைவர் விஜயகுமார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர், மகிளா காங்கிரஸ், கட்சியின் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.