Begin typing your search above and press return to search.
செந்துறை அருகே கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினருக்கு கொரோனா நிவாரணம்
செந்துறை அருகே ஸ்வீட் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
நெருஞ்சிக்கோரை ஸ்வீட் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினர் 30 பேருக்கும்,செந்துறை தாலுகா நல்லநாயகபுரம் கிராமத்திலுள்ள தப்பாட்ட குழுவினர் 15 பேருக்கும் கொரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசி,பிஸ்கட் மற்றும் 15 வகையான பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியை செந்துறை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.