Begin typing your search above and press return to search.
தரமற்ற விதை விற்றால் சிறை! விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை
தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று, விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விதை ஆய்வாளர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த, தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு, தரம், பராமரிப்பு, பதிவு சான்றிதழ், பரிசோதனை அறிக்கை குறித்து ஆய்வு செய்கின்றனர். தரம் குறைவு தெரிந்தால் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
விதை விற்பனை உரிமம், இருப்பில் உள்ள ரகங்கள், விலை, இருப்பு விவரங்களை தகவல் பலகையில் எழுத வேண்டும். காலாவதி விதைகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்தால் முதல் முறையாக தவறு செய்தால் ரூ.500 அபராதம், இரண்டாம் முறையும் தவறு செய்தால் ரூ.1000 அபராதம் அத்துடன் 6 மாதம் சிறை விதிக்கப்படும் என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.