/* */

விவசாயி வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

வந்தவாசி அருகே விவசாயியின் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

விவசாயி வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
X

நகை திருட்டு நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள்  முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவர் கேரளாவில் உள்ள மகளை பார்த்து விட்டு மேல்மருவத்தூர் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

பின்னர் வீட்டின் எதிரே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

இது தொடர்பாக நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 25 May 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!