/* */

திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற திருப்பத்தூர் பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பக்தரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது
X

திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). இவர் நேற்று மாலை குடும்பத்துடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு செல்வதற்காக அத்தியந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த பஸ்சில் ஏறும்போது, அதில் இருந்து இறங்குவது போல் வந்த ஒரு வாலிபர், வெங்கடேசன் சட்டைப்பையில் இருந்த ரூ.ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Updated On: 17 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...