Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் திருக்குறள் தொண்டு மையம் சார்பில் மலைவளம்
திருவண்ணாமலையில், திருக்குறள் தொண்டு மையம் சார்பில், மலைவளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், திருவண்ணாமலையில், 161 வது மாதத்தில், திருக்குறள் ஓதி மலைவளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவிஞர் பேரவை தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருக்குறள் தொண்டு மையம் தலைவர் பாவலர் குப்பன் அனைவரையும் வரவேற்றார்.
திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர், திருக்குறளை ஓதிக்கொண்டே 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப்பாதையை வலம் வந்தனர். நிகழ்ச்சியில், திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.