சித்ரா பௌர்ணமியையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்கள் இடங்கள் அறிவிப்பு
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்கள் இடங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
இந்த ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பௌர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இதற்காக 3 ஆயிரத்து 242 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை சுற்றி 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 37 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.
சித்ரா பவுர்ணமியையொட்டி 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் இடங்கள் அறிவிப்பு
வேலூர் சாலை ஐடிஐ பின்புறம்
அவலூர்பேட்டை சாலை எஸ் ஆர் ஜிடிஎஸ் பள்ளி எதிரில்
திண்டிவனம் சாலை மார்க்கெட்டிங் கமிட்டி
வேட்டவலம் சாலை ஏந்தல் சர்வேயர் நகர்
திருக்கோயிலூர் சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
மணலூர்பேட்டை சாலை ரிங் ரோடு
தண்டராம்பட்டு சாலை மம்மி டாடி திருமண மண்டபம் எதிரில்
செங்கம் சாலை அத்தியந்தல் அருகில்
காஞ்சி சாலை ஆடையூர் டான் பாஸ்கோ பள்ளி அருகில்
தற்காலிகப் பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதையில் கற்பூரம் ஏற்றவும், மலை மீது ஏறுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ பவன்குமார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்ட உள்ளன.
அருணாசலேவரர் கோவிலுக்கு சாமிதரிசனம் செய்யவரும் வயதான பக்தர்களை அழைத்து செல்ல 3 பேட்டரி கார்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 39 இருசக்கர வாகன பேட்ரோல் போலீசார் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மருத்துவ உதவிக்காக இரு சக்கர வாகன ஆம்புலன்சு வாகனமும் ரோந்து பணியில் இருக்கும்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 சாலைகளின் முகப்பு பகுதிகளில் வேளாண்துறை சார்பில் 42 விவசாய பம்பு செட்டுகளில் பக்தர்கள் குளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் சார்பில் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய 40 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் அன்னதானம் செய்ய விரும்பபுவர்களுக்கு உரிய அனுமதியும், இடமும் அளிக்கப்படும். தற்காலிக பஸ் நிலையம் மற்றும் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் முக்கிய பகுதிகளுக்கு செல்ல இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து கிரிவலப்பாதை மற்றும் நகருக்குள் உள்ள பகுதிகளுக்கு வர தனிநபர் ஆட்டோ கட்டணமாக ரூ.30 முதல் ரூ.50 வவை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிரிவலத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைத்து அரசு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்புடன் கிரிவலம் சென்று வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.