/* */

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற எஸ்பி அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்கும் போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற திருவண்ணாமலை எஸ்பி அறிவுறுத்தினார்

HIGHLIGHTS

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற எஸ்பி அறிவுறுத்தல்
X

திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் ரெட்டி 

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவி வழிபாடு, நடத்த கூடாது. பொதுமக்கள் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தலாம்.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஒன்றுகூடி ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கும் போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 11 துணைக் காவல் கண்காணிப்பாளர் உட்பட 1115 காவல்துறையினர் மற்றும் 250 ஊர் காவல் படையினர் என மொத்தமாக 1365 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Sep 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  3. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  5. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  6. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  7. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  9. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  10. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு