/* */

நவீன விவசாய இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு:வேளாண் அதிகாரி தகவல்

புதிய தொழில்நுட்பம்,இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நவீன விவசாய இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு:வேளாண் அதிகாரி தகவல்
X

பைல் படம்

தமிழ்நாடு அரசின் வேளாண் துறையின் சார்பில் சிறந்த விவசாயிகள், விவசாய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022-23-ம் ஆண்டில் மாநில அளவில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், எந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியுடைய, இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள், செல்போனில் உழவன் செயலி மூலமாக தனது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை அல்லது துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்ப படிவத்தினை இணைத்து வேளாண்மை உதவி இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநில தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும்.

அதன் பின்பு விண்ணப்பங்கள் மாநில குழுக்களால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில் நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும், புதிய வேளாண் எந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு தொகை வழங்கப்படும்.

தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பதிவு செய்து போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்து உள்ளார்.

Updated On: 24 Dec 2022 4:58 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...