Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை: 100 மரக்கன்றுகளை நட்ட காவலர்கள்
திருவண்ணாமலை தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் காவலர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், திருவண்ணாமலை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி முதல்வருமான அ.பவன் குமார், திருவண்ணாமலை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பயிற்சி காவலர்களுக்கு காவல் பணி குறித்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்காலிக பயிற்சி பள்ளி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி காவலர்கள் ஆளுக்கொரு மரக்கன்று நடும் வகையில் மொத்தம் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் சூப்பிரண்டும், தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வருமான எஸ்.ராஜாகாளீஸ்வரன் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.சீனிவாசன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.