Begin typing your search above and press return to search.
வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
வந்தவாசியில் 210 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்
HIGHLIGHTS
வந்தவாசி நகரில் உள்ள பேக்கரி, ஓட்டல், மளிகைக் கடைகள் மற்றும் மொத்த விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் சோதனைகள் நடைபெற்றன.
சோதனையின் போது 210 கிலோ எடையுள்ள, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 கடை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையில் சுகாதார ஆய்வாளர் பாண்டிசெந்தில்குமார், மேற்பார்வையாளர் ஏசுபாதம், லோகநாதன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பழனி, நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.