வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் தீவிரமாக ஈடுபட அமைச்சர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட அமைச்சர் அறிவுறுத்தல்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு திமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கிளை கழக மற்றும் அணிகள் சார்ந்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் எ வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை தெற்கு , வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் அவரவர் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
பெயர் தேர்தலுக்கு படிவம் 6 பெயர், நீக்க படிவம் 7 , பெயர் திருத்தம் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 , பாகம் வார்டு மாற்றத்திற்கு படிவம் 8ஏ பூர்த்தி செய்து வழங்குமாறு கூறியுள்ளார்