திருவண்ணாமலையில் ஏப்.22ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலையில் வரும் ஏப்.22ஆம் தேதியன்று வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதியன்று படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8 முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், நர்சிங் ,முதுநிலை மேலாண்மை போன்ற கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். 4 பாஸ்போர்ட் புகைப்படம், குடும்ப அட்டை ,ஜாதி சான்று, கல்வித்தகுதி சான்றிதழ் நகல் உடன் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை நேரத்திலும் அல்லது 04175-233381. என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.