/* */

வெயில் தாக்கம் அதிகம்: அருணாசலேஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

வெயில் தாக்கம் அதிகம்: அருணாசலேஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்
X

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மோர் வழங்கப்பட்டது 

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் இலவசமாக வழங்கப்பட்டது.

பகல் வேளையில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனால் பகல் வேளையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 10-ந் தேதி 94 டிகிரியும், 11-ந் தேதி 94.2 டிகிரியும், 12-ந் தேதி 94 டிகிரியும், இன்று 97 டிகிரியாகவும் பதிவாகியது.

வெயிலிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளுக்கு படையெடுக்கின்றனர். மேலும் தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மோர் வழங்கப்பட்டது.

Updated On: 13 March 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு