திருவண்ணாமலையில் திடீர் கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 5 பேர் கைது
திருவண்ணாமலையில், நேற்று இரவு ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற திடீர் கஞ்சா ஒழிப்பு வேட்டையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில், திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் ரவுடியிசத்தை ஒழிக்கு வகையில், நேற்று இரவு போலீசார் ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற திடீர் சோதனை நடத்தினர்.
மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாகாளீஸ்வரன், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண்ஸ்ருதி, திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துனை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் காவலர்கள் இனைந்து கஞ்சா மற்றும் ரவுடிசத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ஸ்ட்ராமிங் ஆபரேசன் நடத்தினர்.
இதில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத 3 நான்கு சக்கர வாகனம் மற்றும் 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.