திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அரசுப் பணியில் சேர போட்டித் தேர்வில் பங்கேற்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன்படி IAS , IPS, RRB, போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் செயல்படும்.
இப்பயிற்சி வகுப்பு வார நாட்களில் திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தேர்வுக்கு தேவையான பாடப் பிரிவுகளுக்கு தனித்தனி ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.