திருவண்ணாமலையில் திமுக செயல்வீரர் கூட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் கட்சிகளின் தேர்தல் பரப்புரை வேகம் எடுத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியின் சட்டமன்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று திருவண்ணாமலை, திருக்கோயிலூர் சாலையில் நடைபெற்றது. இதில் கீழ்பென்னாத்தூர் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வா.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கூட்டத்தில் பேசிய எ.வா.வேலு கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பாமக போட்டியிடுவதாகவும், ஆனால் தொகுதியில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பாமாகவினருக்கு வாய்ப்பு தராமல் வேறு மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவர் போட்டியுடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், திமுக எப்போது சமூக நீதி கொள்கையை பின்பற்றும் கட்சிதான் என்றும் அதில் இருந்து வந்தவர்கள் தான் கலைஞர், ஸ்டாலின் மற்றும் அனைத்து திமுகவினர் என்றும் ஆவேசமாக பேசினார்.