Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 80,949 பேருக்கு தடுப்பூசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 80,949 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1074 இடங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு முகாமிலும் செவிலியர் , மருத்துவ உதவியாளர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் 80,949 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இதன் மூலம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டோரின் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.