/* */

திருவண்ணாமலையில் நிவாரண நிதி, மளிகை பொருட்களை அமைச்சர் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதி, 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அமைச்சர் வழங்க்கினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில்  நிவாரண நிதி, மளிகை பொருட்களை  அமைச்சர் வழங்கினார்
X

தமிழகத்தில் இரண்டாம் தவணையாக கொரோனா நிவாரண நிதி ரு.2ஆயிரம் மற்றும் 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு. கலந்து கொண்டு இரண்டாம் தவணையாக கொரோனா நிவாரண நிதி ரு.2ஆயிரம் மற்றும் 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 61ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக டோக்கன் கடந்த 5நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. முதல் தவணை 99.50 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அதனை தொடர்ந்து 2வது தவணையும் வழங்கப்படும். நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் துணை தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றம் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி