Begin typing your search above and press return to search.
அங்கன்வாடி உணவு சமைக்கும் அறைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் அறைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று ஆய்வு செய்தார் .
இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஇயக்குனர், உதவி ஆட்சியர் கட்டா ரவி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் அறைகளில் ஆய்வு மேற்கொண்டார்.