/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 317 ஹெக்டேர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில்அரசுக்கு சொந்தமான 317 ஹெக்டேர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 317 ஹெக்டேர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர இடங்கள் என மொத்தம் 1424.77 ஹெக்டேர் அளவில் நில ஆக்கிரமிப்புகள் செய்துள்ளது கண்டறியப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் மாவட்ட நிர்வாகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு தினசரி போர்க்கால அடிப்படையில் துரிதமாக அகற்றப்பட்டு வருகிறது. அதில் 30 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களும் மீட்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 317.44 ஹெக்ட்டேர் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தெரிவித்து அறிவிப்பு கடிதங்களும் அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் யாரேனும் நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தவறும் பட்சத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும்.

மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 March 2022 1:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!