அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
HIGHLIGHTS
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றும் இன்று நடைபெற்றது. இந்த விழா இன்று தொடங்கி பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். 10ம் நாள் அன்று அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும்.
இன்று அதிகாலை திருக்கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 06.00 மணியளவில் கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையார் சந்நதி முன்பாக உள்ள தங்க கொடிமரத்தின் அருகில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதையடுத்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் காலை, இரவு இரு வேலைகளிலும் வீதி உலா நடை பெறும்.