திருவண்ணாமலை மாவட்டத்தில் 1595 பேர் வேட்புமனு தாக்கல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1595 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இறுதி நாளான இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 846 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும், 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன.
வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் ஆர்வமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 1595 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர்.
வரிசை எண் | நகராட்சி | மனுக்களின் எண்ணிக்கை |
1 | திருவண்ணாமலை | 331 |
2 | வந்தவாசி | 153 |
3 | ஆரணி | 198 |
4 | திருவத்திபுரம் | 161 |
மொத்தம் | 843 |
வரிசை எண் | பேரூராட்சி | மனுக்களின் எண்ணிக்கை |
1 | கலம்பூர் | 69 |
2 | சேட்டுப்பட்டு | 96 |
3 | தேசூர் | 57 |
4 | பெரணமல்லூர் | 49 |
5 | கண்ணமங்கலம் | 71 |
6 | கீழ் பெண்ணாத்தூர் | 80 |
7 | வேட்டவலம் | 57 |
8 | போளூர் | 87 |
9 | செங்கம் | 111 |
10 | புதுப்பாளையம் | 75 |
மொத்தம் | 752 |