நெல்லை:மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரை மீட்ட தன்னார்வலர்கள்
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரை மீட்டு மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு முகாமில் தங்க வைத்து உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள்.
HIGHLIGHTS
சாலையில் கேட்பாரற்று கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்ட தன்னார்வலர்கள்.
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் அலுவலகம் செல்லும் போது, சாலையோரம் கிடந்த இளைஞரை பார்த்துள்ளார். உடனடியாக, மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு தற்காலிக முகாமிற்கு போன் செய்து இளைஞருக்கு உதவிட கேட்டுக் கொண்டார். அதன்பேரில், சோயா மாரிமுத்து தலைமையில்( R-SOYA )சோயாவின் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை தூக்கி கொண்டு அருகில் இருந்த மாநகராட்சி கட்டண கழிப்பறையில் குளிக்க வைத்து சுத்தம் செய்த பின் புதிய ஆடை மாற்றி பின் கல்லணை பள்ளியில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு தற்காலிக முகாமிற்கு அழைத்து சென்று முடி திருத்தி, உணவு சாப்பிட வைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் பேசியதில் பெயர் சாமுவேல், சொந்த ஊர் திசையன்விளை அருகே இடச்சவிளை, தந்தை பெயர் நல்லதம்பி என்றும் இவரின் குடும்பம் நல்ல வசதியான நிலையில் இருந்து பின் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதும், தாய், தந்தை இறந்து விட்டதாகவும் வேறு உறவு யாரும் இல்லை என்றும் தெரியவந்தது. தொடர்ந்து மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு முகாம் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.