திருநெல்வேலி மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், மற்றும் மாநகராட்சிப் பகுதிகள் உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்றும் நாளையும் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று (12ம் தேதி) நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட கழகச் செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் கழக அமைப்புச் செயலாளர் ஜக்கையன், தேனி மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் கழக நாடாளுமன்ற மக்களவை தலைவர் ரவீந்திரநாத், தேனி மாவட்ட கழக செயலாளர் சையது கான் கலந்துகொண்டனர்.
பின்னர் கழக அமைப்பு தேர்தலை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் முதலானவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளரிடம் பெற்று அவற்றை ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் வழங்கினர்.
கழக சட்டத்திட்டத்தின் படி தேர்தல்களை முறையாக நடைபெற வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இதில் கழக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.