/* */

நெல்லையில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

முன்னீர்பள்ளத்தில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

HIGHLIGHTS

நெல்லையில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X
பைல் படம்

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவை பகுதியைச் சேர்ந்த பராசக்தி(24) என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற ராஜேஸ்வரன்(26) என்பவரின் சித்தப்பா மகன் உத்திரமூர்த்தி என்பவர் பிரச்சனை செய்துள்ளார்.

அதனால் பராசக்தி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் உத்திரமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து தற்போது உத்திரமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பராசக்தி அவரது வீட்டின் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தபோது குமார் என்ற ராஜேஷ்வரன் பராசக்தியை வழிமறித்து உத்திரமூர்த்தி சிறையில் இருப்பதற்கு நீ தான் காரணம் என்று கூறி அவதூறாக பேசி அரிவாளால் தாக்கும் போது பராசக்தி சுதாரித்துக்கொண்டு விலகியுள்ளார்.

பின்னர் பராசக்தி சத்தம் போடவும் அருகிலிருந்தவர்கள் வரவும் ராஜேஷ்வரன் பராசக்தியை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து பராசக்தி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் விசாரணை மேற்கொண்டு பராசக்தியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த குமார் என்ற ராஜேஸ்வரனை கைது, செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Updated On: 21 Aug 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  3. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  8. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  10. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...