/* */

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
X

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக 10 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நெல்லையில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது. இந்நிலையில் இன்று தாமிரபரணி ஆற்றில் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 55 மில்லி மீட்டர் மழை பொழிந்து உள்ளது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தாமிரபரணி கரையோரம் உள்ள மக்களுக்கு தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 3 Nov 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது