/* */

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் தூய்மை பணியாளர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

திருநெல்வேலி டவுன் பகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் தூய்மை பணியாளர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
X

திருநெல்வேலி டவுன் பகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் டவுண் பகுதி சார்பாக தூய்மை பணியாளர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் டவுண் பகுதி தலைவர் பீர் மைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கரீம் வரவேற்புரை ஆற்றினார். தொகுதி செயலாளர் முகம்மது கௌஸ், துணை தலைவர் அப்துல்லா காஜா, நிர்வாகிகள் காதர்ஷா, வார்டு கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சுகாதார ஆய்வாளர் முருகன், பரப்புரையாளர் கோவிந்தம்மாள், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

தூய்மைபணியாளர்களுடன் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி உணர்வுபூர்வமாக இருந்தது. நோன்பு கஞ்சி , பழங்கள், குளிர்பானங்கள், மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாற்றினார்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக பகுதி பொருளாளர் போத்தீஸ் பாபு நன்றிஉரை ஆற்றினார்

Updated On: 23 April 2022 1:15 PM GMT

Related News