/* */

வியாபாரி பைக்கில் ரூ.1.58 லட்சம் பணம் திருடிய வாலிபர் கைது

வியாபாரி பைக்கில் ரூ.1.58 லட்சம் பணம் திருடிய வாலிபர் கைது
X

தூத்துக்குடியில் மீன் வியாபாரி பைக்கில் வைத்திருந்த பணம் ரூ.1.58 லட்சத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் கோமஸ் (62), மீன் வியாபாரியான இவர் கடந்த மாதம் 30ம் தேதி மீன்களை ஏலம் எடுப்பதற்காக, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் பைக்கில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 58ஆயிரம் பணம் திருடு போனது.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் விசாரணையில், தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த ரோசாரி மகன் ஏத்தேல்பத் (32) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1லட்சத்து 58 ஆயிரம் பணத்தை மீட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?