/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆத்தூர் கஸ்பா, ஆத்தூர் பேரூராட்சி பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

17/12/2023 மற்றும் 18/12/2023 ஆகிய இரு தினங்களில் பெய்த அதீத கனமழை மற்றும் வெள்ளப்பாதிப்பின் காரணமாக அடித்து செல்லப்பட்ட மற்றும் அழிந்து சேதமடைந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ்கள் மற்றும் பட்டம் மற்றும் பட்டய சான்றுகள் அனைத்தின் இரண்டாம்படி அசல் ஆவணங்கள் பெற மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைவாரியாக வழங்கவும், வருவாய் துறையின் வழங்கப்படும் இணைய வழி சான்றுகளான இருப்பிட ,வருமான சாதி சான்றுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ,ஆதார் அடையாள அட்டை, விதவை/ ஆதரவற்ற விதவை சான்றுகள் மாற்று திறனாளி அடையாள அட்டை , எரிவாயு இணைப்பு புத்தகம் , வங்கி கணக்கு புத்தகம், மகாத்மா காந்தி தேசிய* ஊரக வேலை வாய்ப்பு திட்ட அட்டை மற்றும் இதர சான்றுகள் சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக பெற்று வழங்க சிறப்பு முகாம் ஆத்தூர் கஸ்பா கிராமத்தில் நடைபெற உள்ளது

முகாம் நடைபெறும் நாள் 28/12/2023 மற்றும் 29/12/2023

இடம் :அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர் நேரம் - காலை 9.00மணி முதல் மாலை 5.30 மணி வரை/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயன் அடையுமாறு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

Updated On: 26 Dec 2023 6:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  2. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  3. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  5. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  6. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  7. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  8. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...