திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி துவக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3, 86,592 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.
HIGHLIGHTS
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3, 86,592 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இணைந்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை 19-வார்டு கட்டிடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர் இருவரும் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் இலவங்கார்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
முன்னதாக, திருவாரூர் அருகே காட்டூர் - தண்டலை சாலையில், ஓடம்போக்கியாற்றின் குறுக்கே 218 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.