/* */

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி துவக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3, 86,592 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி துவக்கம்
X

பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை,  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி  மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தனர். 

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3, 86,592 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இணைந்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை 19-வார்டு கட்டிடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர் இருவரும் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் இலவங்கார்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

முன்னதாக, திருவாரூர் அருகே காட்டூர் - தண்டலை சாலையில், ஓடம்போக்கியாற்றின் குறுக்கே 218 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

Updated On: 4 Jan 2022 8:33 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு