/* */

திருவாரூர் நகராட்சி தேர்தலில் தி.மு.க.வினர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

திருவாரூரில் தி.மு.க. மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் 30 வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூர் நகராட்சி தேர்தலில்  தி.மு.க.வினர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்
X

திருவாரூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. திருவாரூர் தி.மு.க. நகர கழக அலுவலகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மரியாதை செய்தார் .தொடர்ந்து 30 வார்டு உறுப்பினர்களும் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் மற்றும் அவரது மனைவி புவனப்பிரியா தனித்தனி வார்டு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். மேலும் 1வது வார்டு மற்றும் 2 வது வார்டுகளில் திருவாரூர் வர்த்தக சங்க தலைவராக உள்ள பாலமுருகன் மற்றும் அவரது மனைவி கவிதா போட்டியிடுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Feb 2022 5:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது