தேனி மாவட்டத்தில் மீண்டும் கட்டுக்குள் வந்தது கொரோனா
Corona News In Tamil- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
HIGHLIGHTS
Corona News In Tamil- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு மாதங்களுக்கும் மேலாக இருந்து வந்தது. இருப்பினும் சராசரி கொரோனா தினசரி பாதிப்பு 60 வரை உயர்ந்தது. இரண்டு மாத கொரோனா பரவலிலும், ஒருவர் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவு பாதிக்கப்படவில்லை. உயிரிழப்பும் இல்லை. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மூன்று நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. நேற்று 9 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்து கொரோனா தொற்று முடிவுக்கு வருவதாக கூற முடியாது. மக்கள் முககவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2