/* */

தஞ்சை மாநகராட்சியில் இன்று 4 மையங்களில் 400 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி

தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சியில் இன்று 4 மையங்களில் 400 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி
X

தஞ்சை மாநகராட்சியில் இன்று 04 மையங்களில் 400 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்படும் என்றும், கோவாக்சின் கையிருப்பு இல்லாததால் கோவிஷீல்டு மட்டுமே போடப்படும் என மாநகராட்சி அறிவிப்பு.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 04 மையங்களில் 400 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாநகர் பள்ளியில் 100 நபர்களுக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 100 நபர்களுக்கும், லட்சுமி நாராயணன் பள்ளியில் 100 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 100 என நான்கு மையங்களில் 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது. மேலும் கோவாக்சின் கையிருப்பு இல்லாததால் எந்த மையங்களிலும் இந்த ஊசி லுத்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...