/* */

தஞ்சை அருகே துலுக்கம்பட்டியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 6 பேர் கைது

தஞ்சை அருகே துலுக்கம்பட்டியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே துலுக்கம்பட்டியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 6 பேர் கைது
X

தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பிரிவு சாலை பகுதியில் 6 பேர் ஆயுதங்களுடன் நின்றிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு) கார்த்திகேயன் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 2 அரிவாள், கத்தி மற்றும் உருட்டுக்கட்டையுடன் நின்றிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை இ.பி. காலனி ஆறுமுகம் என்பவரின் மகன் மணிகண்டன் (25), செபாஸ்டியன் மகன் பிரின்ஸ்லாரா (27), ஜீவா (23) சென்னை பாண்டியன் நகரை சேர்ந்த கேசவன் மகன் வெங்கட் (27), மாதாக்கோட்டை கலியன் மகன் அஜித் செல்வம் (21), கும்பகோணம் பாஸ்கரன் மகன் ராஜேஸ்கண்ணன் (21) என்பது தெரிய வந்தது. இதில் சிலர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 4 April 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு