ஓய்வு பெற்ற போலீசாரை தாக்கி ரூ.15 லட்சம் வழிப்பறி
தஞ்சாவூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வு பெற்ற போலீசாரை தாக்கி பணத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (65) ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து 15 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் கறம்பக்குடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். அப்போது மருங்குளம் கறம்பக்குடி சாலையில் கோபால் நகர் அருகே பின்னால் வந்த இரண்டு மர்மநபர்கள் லட்சுமணனை தாக்கி அவரிடம் இருந்த 15 லட்சம் ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனத்தினையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி மற்றும் வல்லம் போலீசார் சென்று லட்சுமணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம்பட்ட லட்சுமணன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.