/* */

ஓய்வு பெற்ற போலீசாரை தாக்கி ரூ.15 லட்சம் வழிப்பறி

தஞ்சாவூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஓய்வு பெற்ற போலீசாரை தாக்கி பணத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஓய்வு பெற்ற போலீசாரை தாக்கி ரூ.15 லட்சம் வழிப்பறி
X

லட்சுமணன்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த பாப்பாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (65) ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து 15 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் கறம்பக்குடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். அப்போது மருங்குளம் கறம்பக்குடி சாலையில் கோபால் நகர் அருகே பின்னால் வந்த இரண்டு மர்மநபர்கள் லட்சுமணனை தாக்கி அவரிடம் இருந்த 15 லட்சம் ரூபாய் ரொக்கம், இரு சக்கர வாகனத்தினையும் பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி மற்றும் வல்லம் போலீசார் சென்று லட்சுமணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம்பட்ட லட்சுமணன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On: 21 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது